Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM

கொடைக்கானலில் சூறைக்காற்றால் வீடுகள் சேதம் :

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த காற்று வீசத் தொடங்கியது. இது சூறைக்காற்றாக மாறி சுழன்று அடித்ததில் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, காமனூர், மூலையாறு உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வீடுகளின் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளின் மேற்கூரை தகரங்கள் காற்றில் பறந்தன. இதில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. சூறைக்காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்ததில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பண்ணைக்காடு முதல் தாண்டிக்குடி வரை செல்லும் சாலையில் மரங்கள் அதிகளவில் சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x