Published : 16 Jul 2021 03:12 AM
Last Updated : 16 Jul 2021 03:12 AM

அச்சக உரிமையாளர் வீட்டில் 50 பவுன் திருட்டு :

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி கருப்பண்ணன் தெருவில் வசித்து வருபவர் பழனிகுமார். அச்சக நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 11-ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு நேற்று காலை ஊர் திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த சுமார் 50 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தன.

பழனிகுமார் இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும், இத்திருட்டு சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் தனிப் படை அமைத்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x