Published : 16 Jul 2021 03:13 AM
Last Updated : 16 Jul 2021 03:13 AM
நெல்லையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்தவழக்கில் சமரசம் ஏற்படுத்தஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம்செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த சுப்ரமணியன், முத்துராஜன், சிவராமன், லட்சுமணன், கணேஷ் மாரிமுத்து, சங்கர் மாரிமுத்து, னிவாஸ் மாரிமுத்து, ஹரிஹரன் மாரிமுத்து ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல்செய்தனர். அதில் தங்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கவேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன் பிறப்பித்தஉத்தரவு: இந்த வழக்கு நெருங்கியஉறவினர்களுக்கு இடையில்ஏற்பட்ட சொத்து பிரச்சினையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏவிஎம் மாரிமுத்து என்பவர் நகை தொழில் செய்து வந்த நிலையில் அவரது குடும்பத்தினரும் அதேதொழிலை தொடர்ந்து செய்துள்ளனர்.
தந்தையின் இறப்புக்கு பிறகுசொத்துக்களை பிரிப் பதில்ஒரு தரப்பினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தொழில்கள் மற்றும்அதில் கிடைத்த லாபங்களை பிரிப்பதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதையடுத்தே பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே, இப்பிரச்சினையில் சமரசம் ஏற்படுத்த ஓய்வு பெற்றநீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்படுகிறார். அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பதிவுத்துறை வழங்க வேண்டும்.நீதிபதிவிசாரணைக்கு இரு தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். பின்னர் விசாரணையை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து, அதுவரை மனுதாரர்களை கைது செய்ய விதித்த இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT