Published : 16 Jul 2021 03:13 AM
Last Updated : 16 Jul 2021 03:13 AM

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் :

காரைக்கால்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்தும், விலையை குறைக்கக் கோரியும் காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் பழைய ரயிலடி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.மதியழகன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, வீரராகவன், ஸ்டாலின், விவசாய தொழிற்சங்க நிர்வாகிகள் டி.கே.குமார், எம்.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x