Published : 16 Jul 2021 03:13 AM
Last Updated : 16 Jul 2021 03:13 AM

ஜாதிச்சான்றிதழ் பெற இன்று சிறப்பு முகாம் :

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பழங்குடியின ஜாதிச்சான்றிதழ் பெற அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் இன்று சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் பழங்குடியின ஜாதிச்சான்றிதழ் வேண்டி பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) 16-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் பழங்குடியின மக்கள் பழங்குடியின (எஸ்டி) ஜாதிச்சான்று பெறுவது தொடர்பான உரிய அனைத்து தகுதியான ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனுவாக அளிக்கலாம்’’ என தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x