Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM

புதுச்சேரியில் 121 பேருக்கு கரோனா :

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 6,088 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 93 பேருக்கும், காரைக்காலில் 18 பேருக்கும், ஏனாமில் 5 பேருக்கும், மாஹேவில் 5 பேருக்கும் என மொத்தம் 121 (1.99 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,772 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 302 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 246 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,081 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,327 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x