Published : 15 Jul 2021 03:15 AM
Last Updated : 15 Jul 2021 03:15 AM
வந்தவாசி பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கக் கோரி மணல் லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் காத்திருப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு மாநில மணல் லாரி சங்கங்களின் கூட்ட மைப்புடன் இணைந்து வந்தவாசி வட்டார அறிஞர் அண்ணா மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், மணல் குவாரியை திறக்க வலியுறுத்தி காத்திருப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதற்கு, வந்தவாசி வட்டார அறிஞர் அண்ணா மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சங்கத்தின் கவுரவத் தலைவர் பிச்சைகண்ணு முன்னிலை வகித்தார். மாநில மணல் லாரி கூட்டமைப்பு சங்கத் தலைவர் யுவராஜ் சிறப்புரையாற்றினார்.
வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி எதிரே நடைபெற்ற காத்திருப்பு நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பங்கேற்றதுடன் சுமார் 50-க்கும் மேற்பட்ட மணல் லாரி களை நிறுத்தி வைத்திருந்தனர்.
இது தொடர்பாக தனசேகரன் கூறும்போது, ‘‘திமுக ஆட்சிக்கு வந்தால் லாரிகளில் மணல் அள்ள அனுமதி கிடைக்கும் என்று நம்பினோம். ஆட்சி அமைந்த நிலையில் இதுவரை எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. செய்யாறு ஆற்றில் நெருநகர், அத்தி என ஏதாவது ஒரு இடத்தில் மணல் லாரிகளுக்கு குவாரி தொடங்க வேண்டும். அரசு உடனடியாக ‘ஆன்லைனில்’ மணல் பதிவை தொடங்க வேண்டும். தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த காத்திருப்பு நிகழ்ச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர்’’ என தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT