Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

மத்திய அமைச்சரவை குழுக்கள் மாற்றியமைப்பு ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவுக்கு முக்கியத்துவம் :

புதுடெல்லி

மத்திய அமைச்சரவை குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், சர்பானந்த சோனாவால் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை கடந்த7-ம் தேதி விரிவாக்கம் செய்யப் பட்டது. 43 அமைச்சர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து அமைச்சரவை குழுக்களும் மாற்றிய மைக்கப்பட்டு உள்ளன. இதில் ஸ்மிருதி இரானி, பூபேந்தர் யாதவ், சர்பானந்த சோனாவால் ஆகியோருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் ஸ்மிருதி இரானி,பூபேந்தர் யாதவ், சர்பானந்த சோனாவால் ஆகி யோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே இந்த குழுவில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, தோமர், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், கிரிராஜ் சிங், மன்சுக் மாண்டவியா ஆகியோர் உள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில், வீரேந்திர குமார், கிரண்ரிஜிஜூ, அனுராக் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கெனவே இந்த குழுவில் அமித் ஷா,நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தொடர்கின்றனர்.

பிரதமர் தலைமையிலான முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழுவில் நாராயண் ரானே, ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் அஸ்வின் வைஷ்ணவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் தலைமை வகிக்கும் வேலைவாய்ப்பு மற்றும் தனி நபர் பயிற்சிக்கான அமைச்சரவை குழுவில் அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்தர் யாதவ், ராமச்சந்திர பிரசாத் சிங் மற்றும் கிஷண் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு தொடர்பாக முக்கிய முடிவுகளைஎடுக்கும் அமைச்சரவை குழுவில்எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.

இந்த குழுவில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் மட்டும் இடம்பெற்றுள்ள நியமனத்துக்கான அமைச்சரவை குழுவிலும் எந்த மாற்றமும் இல்லை. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x