Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

புதிதாக 31,443 பேருக்கு கரோனா பாதிப்பு :

நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 31,443 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 118 நாட்களில் மிக குறைந்த அளவாகும்.

நாடு முழுவதும் கரோனா வுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,020 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,10,784 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,31,315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 38,14,67,646 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்தகவல்களை மத்திய சுகா தாரத் துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x