Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM
அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட வக்பு வாரிய உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத் துறைசார்பில் கடந்த ஆண்டு வக்பு வாரியத்துக்கு அமதுல் ஆதிபா, வி.முனவர் உசேன்ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். அதேபோல, கடந்த நவம்பர் மாதம் ஏ.தமிழ்மகன் உசேனும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இவர்கள் மூவரும் அண்மையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, வக்பு வாரிய உறுப்பினர்களாக சமூகப் பணியில் அனுபவம் என்ற அடிப்படையில் எம்.அப்துல் ரஹ்மான்,ஷியா பிரிவு பிரதிநிதியாக சுகைல் ஹைதர் கான், சன்னி பிரிவு பிரதிநிதியாக ஏ.எஸ்.பாத்திமா முசாபர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே ராஜினாமா செய்த மூவரின் பதவிக் காலத்தில், எஞ்சிய பதவிக் காலத்தில் இவர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT