Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM

ரயில் பயணச் சீட்டு முன்பதிவு நேரத்தை நீட்டிக்க கோரிக்கை :

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு முன்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், “பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை மற்றும் ஆனைமலை ஆகிய தாலுகா பகுதி மக்கள் பொள்ளாச்சி ரயில் நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் அமைந்துள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையம் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. ஆனால், சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 4.40 மணிக்கும், மதுரை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இரவு 7.40 மணிக்கும்பொள்ளாச்சியில் இருந்து புறப்படுகின்றன. அந்த நேரத்தில் முன்பதிவு கவுண்டர் மூடப்பட்டிருக் கிறது. இதனால் கடைசி நேர டிக்கெட் ரத்து செய்தல் உள்ளிட்ட சேவைகள் கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

எனவே, பயணச்சீட்டு முன்பதிவு மையத்தின் வேலை நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x