Published : 14 Jul 2021 03:14 AM
Last Updated : 14 Jul 2021 03:14 AM

மின் கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மயில் :

மதுரை

மதுரை மாடக்குளம் கண்மாய் பகுதியில் ஏராளமான மயில்கள் உள்ளன. இவை சுற்றுவட்டாரத்தில் இரை தேடச் செல்வது வழக்கம். ஒரு மயில் பழங்காநத்தத்தில் உள்ள மின்கம்பத்தில் நேற்று காலை சிக்கி உயிருக்குப் போராடியது.

இதைப் பார்த்த பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து திருநகர் ஊர்வன அமைப்பின் உதவியுடன் மயிலை மீட்டு தல்லாகுளத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த பிறகு மீண்டும் மாடக்குளம் கண்மாய் பகுதியில் விடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x