Published : 14 Jul 2021 03:14 AM
Last Updated : 14 Jul 2021 03:14 AM

‘பொறுப்பான பதவியில் இருந்தவர்கள் இப்படி செய்யலாமா? - மாநகராட்சி கட்டிடத்தை உடனே காலி செய்ய அதிமுக முன்னாள் எம்பிக்கு நீதிமன்றம் உத்தரவு :

எம்பி அலுவலகமாகப் பயன் படுத்திய மாநகராட்சிக் கட்டிடத்தை உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை முன்னாள் எம்பி கோபா லகிருஷ்ணன், உயர் நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை மக்களவை உறுப் பினராகப் பதவி வகித்தபோது, தல்லாகுளத்தில் உள்ள மாந கராட்சிக் கட்டிடத்தில் எம்பி அலுவலகம் செயல்பட்டது. எம்பி யின் பதவிக் காலம் முடிந்த பிறகும் அந்த அலுவலகத்தை வாடகை அடிப்படையில் பயன் படுத்தி வந்தேன். சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை கிழக்கு தொகு தியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டேன்.

அப்போது மதுரை தல்லாகுளம் போலீஸார் மற்றும் தேர்தல் பறக் கும் படை அதிகாரிகள் எனது அலுவலகத்தில் சோதனை நடத்தினர். பின்னர் தேர்தல் நடத்தை விதிப்படி மாநகராட்சிக் கட்டிடத்தை கட்சி அலுவலகமாகப் பயன்படுத்தக்கூடாது என்று கூறி அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தேர்தல் நடைமுறைகள் முடிந்து பல மாதங்களாகியும் அலுவலகத்தைத் திறக்க அனுமதி வழங்கவில்லை. எனவே, எனது அலுவலகத்தைத் திறக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

மாநகராட்சி வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரருக்கு எம்பி அலுவலகத்துக்காக அந்தக் கட்டிடம் ஒதுக்கப்பட்டது. பதவிக் காலம் முடிந்து 2 ஆண்டுக்கு மேலாகியும் அந்தக் கட்டிடத்தை மனுதாரர் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார், என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தற்போது எந்தப் பதவியிலும் இல்லை. மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் பதவிக் காலம் முடிந்ததும் அரசுக்குச் சொந்தமான இடங்களைக் காலி செய்ய வேண்டும். ஆனால், மனுதாரர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி மாநகராட்சிக் கட்டி டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பொறுப்பான பதவியில் இருந்தவர்கள் இவ் வாறு செயல்படலாமா?

இது ஏற்றுக்கொள்ளும் விஷ யம் அல்ல. எனவே, மனுதாரர் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டிடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும். வாடகைப் பாக்கியை மனுதாரரிடம் மாந கராட்சி அதிகாரிகள் முழுமையாக வசூலிக்க வேண்டும். அந்தக் கட்டிடத்தில் மனுதாரருக்குச் சொந் தமான பொருட்கள் இருந்தால் அவற்றை எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x