Published : 14 Jul 2021 03:15 AM
Last Updated : 14 Jul 2021 03:15 AM
திருவண்ணாமலை: 6-வது நிதிக்குழு மானியம் குறித்து ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
ஒன்றிய ஆணையாளர் அமிர்தராஜ் தலைமை வகித்தார். அப்போது ஊராட்சிகளின் வரவு- செலவு விவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, தெரு விளக்கு மற்றும் சாலை பராமரிப்பு குறித்து ஊராட்சி செயலாளர்களிடம் கேட்டறியப்பட்டது. அதேபோல், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களை சென்றடையும் வகையில் செயல்பட வேண்டும். கரோனா தடுப்புப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற இலக்கை அடையும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்ஜபார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT