Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

உ.பி., ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மின்னல் தாக்கி 77 பேர் உயிரிழப்பு :

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகேயுள்ள ஆம்பர் கோட்டையில் நேற்று முன்தினம் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். கோட்டையில் இருந்து பலர் தவறி கீழே விழுந்தனர். அங்கு மாநில பேரிடர் மீட்புப் படையினர் இரு நாட்களாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.படம்: பிடிஐ

லக்னோ

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடமாநிலங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை முதல் இரவு வரை இடி, மின்னலுடன் பல மணி நேரம் பலத்த மழை பெய்தது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ், கான்பூர், பதேபூர் உட்பட 16 மாவட்டங்களில் இடி, மின்னல் அதிகமாக இருந்தது. இந்த மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 41 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அறிவித்துள்ளார். படுகாயமடைந் தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கால்நடைகளை பறிகொடுத் தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே ஆம்பர் கோட்டையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது வானிலை திடீரென மாறி இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப் போது ஆம்பர் கோட்டையின் மலை உச்சி யில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரம் மற்றும் கோபுரத்துக்கு செல்லும் பாதையில் சுமார் 70 பேர் நின்று கொண்டிருந்தனர். மழை, இடி, மின்னலை ரசித்த வாறு அவர்கள் செல்ஃபி புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.

யாரும் எதிர்பாராதவிதமாக கண் காணிப்பு கோபுரத்தின் மீது அடுத்தடுத்து 2 முறை மின்னல் பாய்ந்தது. இதில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். கோபுரத்தில் இருந்து பலர் தவறி கீழே விழுந்தனர். போலீஸார், தீயணைப்பு வீரர் கள், பேரிடர் மீட்புப் படை வீரர்கள் இணைந்து இரவு முழுவதும் வனப்பகுதி யில் தேடி ஏராளமானோரை மீட்டனர். இச்சம்பவம் தவிர மேலும் 12 பேர் உட்பட அம்மாநிலத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, முதல் வர் அசோக் கெலாட் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். உயிரிழந் தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் ஞாயிற்றுக் கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அந்த மாநிலத்தின் குவாலியர், சிவபுரி, பெதுல் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மட்டும் மின்னல் பாய்ந்து 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதர வடமாநி லங்களையும் கணக்கிட்டால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங் களில் மின்னல் பாய்ந்து உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளில், "மின்னல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் இழப்பீடு வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.

காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரா கண்ட், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. உத்தராகண்டில் நிலச்சரிவு காரணமாக ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு வடமாநிலங் களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x