Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் - அரசுப் பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி :

சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தில் அரசுப் பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சிகள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வருவாய்த் துறையால் கடந்த 3-ம் தேதி வழங்கப்பட்ட அனுமதியின்படி, 11 துறைகளைசேர்ந்த 100 ‘ஆ’ பிரிவு அலுவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சி சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நேற்று (ஜூலை 12)தொடங்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் குடிமைப்பணி பயிற்சி நிலையத்தில் ஈரோடு, தேனி, விழுப்புரத்தை சேர்ந்த 440பணியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. சேலம், திருச்சி, மதுரை மண்டல பயிற்சி மையங்களிலும் நேற்று முதல் பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x