Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM
பழநியில் கேரள பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரசித்திபெற்ற ஆன்மிக தலமான பழநிக்கு பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் தனியார் காவலாளிகள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறது. கோயில் அடிவாரம் பகுதியில் காவல் நிலையம் உள்ளது. இந்நிலையில், பழநிக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.
இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு பழநியில் நடந்தது இல்லை என போலீஸார் தெரிவிக்கின்றனர். பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்க சிலர் வலம் வருவதாக கோயில் நிர்வாகம் அடிக்கடி எச்சரிக்கை அறிவிப்பு செய்கிறது.
பழநியில் உள்ள ஏராளமான விடுதிகளை முறைப்படுத்துவது, சட்டவிரோதமாக தங்குபவர்களைக் கண்காணிப்பது, நகரில் போலீஸாரின் ரோந்துப் பணிகளை அதிகரிப்பது, சமூக விரோதிகளை அடையாளம் கண்டு ஒடுக்குவதன் மூலமே இதுபோன்ற செயல்களை தடுக்க முடியும் என பக்தர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT