Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

மகளை கொன்றதாக தாய் கைது :

மேட்டுப்பாளையம்: காரமடை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மகளின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள கணுவாய்பாளையத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி என்ற நதியா(31). இவரது கணவர் சரவணக்குமார், கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, 13 வயது மகள், 11 வயது மகன் ஆகியோரை சின்னதடாகத்தில் உள்ள மாமியார் வீட்டில் விட்டுவிட்டு, மகாலட்சுமி தனது தாய் நாகமணி(47) வீட்டில் வசித்து வந்தார். சமீப நாட்களாக தாய், மகள் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த நாகமணி, மகள் மகாலட்சுமியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டுள்ளார். இதில் மகாலட்சுமி உயிரிழந்தார். தகவலின்பேரில், காரமடை போலீஸார் வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது,‘‘மகாலட்சுமி அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். இதை தாய் நாகமணி கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் நாகமணி, கல்லை போட்டு மகளை கொன்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நாகமணி கைது செய்யப்பட்டுள்ளார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x