Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் சோளபாளையம் ஊராட்சியில் செயல்பட்டுவரும் இரண்டு கல்குவாரிகளின் உரிமங்களை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சிதலைவர் விசாலாட்சி, திமுக ஒன்றிய செயலாளர் காணியப்பன், திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு அமைப் பாளர் ஆறுச்சாமி உள்ளிட்ட அப்பகுதி மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.சந்திராபுரத்தில், இரண்டு தனியார் கல் குவாரிகள் உள்ளன. குவாரியில், பாறைகளை உடைக்க வெடி வைப்பதால், வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு, சுவர்களில் விரிசல்ஏற்படுகிறது. தோட்டம், வீடுகளில் கற்கள் விழுகின்றன. வெடி வைத்த பின்னர் ஏற்படும் புகைமூட்டம், பாறை துகள் ஆகியவற்றால் காற்று மாசுபாடு ஏற்பட்டு பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கல் குவாரிகள், கிரஷர், எம் சாண்ட்மற்றும் தார் பிளான்ட் ஆகியகனிமம் சார்ந்த எந்தவிதமான தொழிற்சாலைகளும் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். எனவே, கல்குவாரிகளின்உரிமங்களை புதுப்பிக்கவோ மற்றும் புதிய உரிமம் வழங்கவோகூடாது. இவ்வாறு அதில் தெரிவித் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT