Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

கரோனா விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை :

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையராக இருந்த சந்திரா, திருவண்ணாமலை மாவட்ட நகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். கோயம்புத்தூர் நகரியல் பயிற்சி இயக்குநரகத்தில் துணை இயக்குநராக பணியாற்றி வந்த முருகேசன், கிருஷ்ணகிரி நகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: கரோனா விதிமுறைகள், பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதே முதல் பணியாக இருக்கும். மக்களும் அரசு விதிகளை மதித்து நடக்கவேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளான பொது சுகாதாரம், குடிநீர், சாலை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு நிறைவேற்றப்படும். மக்கள், தங்கள் குறைகளை எந்நேரமும் தெரிவிக்கலாம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை வியாபாரிகள், பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x