Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து விருத்தாசலத்தில் காங்கி ரஸார் நேற்று சைக்கிள் பேரணி நடத்தினர்.
பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் அறிவுறுத் தலின் பேரில், தமிழகம் முழுவதும் நேற்று சைக்கிள் பேரணி நடைபெற்றது. அதன்படி விருத்தாசலத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.ஆர்.ராதாகி ருஷ்ணன் தலைமையில் விருத்தாசலம் பாலக்கரையில் இருந்து சைக்கிள் பேரணி தொடங்கியது.
பேரணியில் முன்னாள் மாவட்டத் தலைவர் நகர் பெரியசாமி, விருத்தாசலம் நகர காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாவு விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும் முழக்கமிட்டவாறு சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT