Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு மேலும் இரு துறைகள் ஒதுக்கீடு :

புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு மேலும் 2 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு திட்டம் மற்றும் நிதி துறை, பணியாளர் மற்றும் சீர்திருத்த துறை ஆகியவை கூடுதலாக ஒதுக்கீடு புதுச்சேரி அரசிதழில் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வென்று கடந்த மே 2-ம் தேதி ஆட்சியமைத்தது. அதையடுத்து அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்து, பதவியேற்பதற்கு 50 நாட்களானது. பதவியேற்றும் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் தமிழிசையிடம் முதல்வர் ரங்கசாமி அளித்தார். அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்து தலைமைச்செயலருக்கு அனுப்பினார். அதையடுத்து அன்று மாலையில் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது.

வழக்கமாக முதல்வர் வசம் இருக்கும் உள்துறையை பாஜக கோரியது. அதை இம்முறை பாஜகவுக்கு முதல்வர் தந்தார். பாஜகவைச்சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்துக்கு உள்துறை தரப்பட்டது. ஆனால் முக்கியத்துறைகளை என்.ஆர்.காங்கிரஸ் வசம் இருந்தது. நிதி உள்பட முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் முக்கிய துறையான நிதி முதல்வருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x