Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
மதுரை பிபீ குளம் முல்லை நகர் பகுதியில் மாநகராட்சியினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் 4 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.
மதுரை மாநகராட்சி சார்பில் நேற்று பிபீ குளம் முல்லை நகர் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிபீகுளம் உழவர் சந்தை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 7 மணி முதல் 11 மணி வரை போராட்டத்தை தொடர்ந்ததையடுத்து 70 பெண் கள் உள்ளிட்ட 140 பேரை போலீஸார் கைது செய்தனர். அப்பகுதியினர் கூறுகையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடி யிருந்து வருகிறோம். திடீரென ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி வெளியேற்றினால் பாதிக்கப் படுவோம். மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்றனர். அதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT