Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

நத்தம் அருகே - காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் :

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மணக்காட்டூரில், காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும், சைக்கிள் ஊர்வலமும் நடந்தது.

வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். நகர் சிறுபான்மைப் பிரிவு தலைவர் சுரேஷ், முன்னாள் தெற்கு வட்டாரத் தலைவர் சின்னத்தொந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x