Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி
மதுரை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்
ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மதுரை மாநகர் செயலாளர் கதிரவன் தலைமை வகித்தார். கட்சியின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பாவரசு, துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், மாநிலச் செயலாளர் அய்யங்காளை, மாவட்டச் செயலாளர்கள் செல்வராசு (வடக்கு),இன்குலாப் (தெற்கு), பஞ்சமி நில மீட்பு இயக்க மாநிலச் செயலாளர் சசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைப்பது, அரசுப் பணியில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவது, வண்டியூர் தீர்த்தக் காட்டில் இலவச பட்டா பெற்றவர்களுக்கு நிலத்தை ஒப்படைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கமிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT