Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
ராஜபாளையத்தில் உள்ள மயானங்களைத் தூய்மையாகப் பராமரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த ராமராஜ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: ராஜபாளையம் நகராட்சி யில் உள்ள மயானங்களை முறையாகப் பராமரித்து அடிப் படை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும், எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மயானங்களை முறையாகச் சுத்தப்படுத்தி அடிப்படை வசதிகளுடன் தண்ணீர், மின் சாரம் உள்ளிட்டவைகளை உடனடியாகச் செய்துதர இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT