Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் இணையவழி பயிலரங்கு :

சிவகாசி

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி சார்பில் இணைய வழியில் புத்தாக்கப் பயிலரங்கு நடைபெற்றது.

கரோனா சூழலால் சோர்ந் துள்ள மாணவிகளின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக்க மகளிர் குழு சார்பில் 6 நாட்கள் நடந்த இப்பயிலரங்கத்தை உயிரிதொழில்நுட்பவியல் துறை உதவிப்பேராசிரியர் எம்.கே.ராஜன் தொடங்கிவைத் தார். முன்னாள் மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பயிலரங்கத்தில் மெஹந்தி தொடர்பாக எஸ்.நந்தினிதேவி, ஹோம் கேக் செய்யும் முறை குறித்து எம்.கீதாபிரியா, ஃப்ரிட்ஜ் மேக்னட் செய்யும் முறை குறித்து எஸ்.ஸ்வாதி, போட்டா ஃபிரேம் குறித்து எஸ்.வைஷ்ணவி, ஹோம் பிரவுனீஸ் குறித்து எம்.மகாராஜ், ஆன்லைன் சேல் அப்ளிகேசன் குறித்து ஜி.மாரிமுத்து ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் எம்.ரிஃபாயா மீரா மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x