Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM
அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
ஓசூர் கோட்டத்தில் மின்சாரத்தால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மின் கம்பங்கள் பழுதடைந்திருந்தாலோ கம்பங்கள் சாய்ந்த நிலையிலோ மின்கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் அதனை தொடாமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பொழுதுபோக்கிற்காக தங்களின் வீட்டு மாடியில் பட்டம் விடுவது வாடிக்கையாக உள்ளது. அப்பட்டம் அறுந்து அவர்களின் வீட்டின் அருகாமையில் செல்லும் மின்பாதைகளின் மீது விழுந்து மின்சாரம் தடைபடுகிறது. மேலும் இதனால் மின் விபத்து நேரிடும் சூழ்நிலையும் உள்ளதால் பட்டங்களை தனியாக உள்ள மைதானங்களில் விடவும், மின்பாதைகளில் இடையூறு இல்லாத வகையில் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பட்டம் விடும்போது விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பினை பட்டம் விடும் நபர்களே ஏற்க நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT