Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

பெற்றோர் இன்றி தவித்த 4 குழந்தைகள் மீட்பு :

இக்குழந்தைகளைப்பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியருக்கு தகவல் கொடுத்தனர். வட்டாட்சியர் இளங்கோ, நேரில் சென்று குழந்தைகளை பார்த்து விசாரணை மேற்கொண்டார். மேலும் அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப்பொருட்களை வாங்கிக் கொடுத்த அவர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவலும் கொடுத்துள்ளார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் காயத்ரி ஆகியோர் கெலமங்கலம் அரசகுப்பம் கிராமத்துக்கு நேரில் வந்து குழந்தைகளை மீட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x