Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

கோயில் பாதுகாப்புப் பணியில் சேர முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு :

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 62 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். காவல் துறை மூலமாக மாதம் ரூ.7,600 ஊதியமாக வழங்கப்படும்.

பணியில் சேர விரும்புவோர் தங்களது அடையாள அட்டை, படை விலகல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ரேஷன் அட்டை நகல் ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு நேரில் சென்று, உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, நிறைவு செய்து அளிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x