Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

இலவச கண் பரிசோதனை முகாமில் 185 மாணவ, மாணவிகள் பங்கேற்பு :

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இம்முகாமில், திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 129 மாணவ, மாணவிகள் பங்கேற்று, கண் பரிசோதனை செய்துகொண்டனர். அவர்களுக்கு கண் பார்வை குறைபாடு, கண் புரை, கண் அழுத்தம், கண்களில் நீர் வடித்தல் போன்ற அனைத்து வித பிரச்சினைகளுக்கும், கண் மருத்துவ உதவியாளர் முருகேசன் பரிசோதனை செய்து, இலவச ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்கினார்.

மேலும், கண் புரை உள்ளவர்களுக்கு, நாகை மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஐஓஎல் லென்ஸ் இலவசமாக பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில், திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி மருத்துவர் லியாகத் அலி, மருத்துவர் மணிவேல், சுகாதார ஆய்வாளர் பரமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, வாழ்மங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில், 56 மாணவ, மாணவிகள் பரிசோதனை செய்துகொண்டனர். இதில், பார்வை குறைபாடு கண்டறியப்பட்ட 11 பேருக்கு இலவச கண்ணாடி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை திருமருகல் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x