Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

பிச்சை பாத்திரம் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

பெரம்பலூர்: பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கட்சி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் பிச்சை பாத்திரம் ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் பாலக்கரை பகுதி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார்.

நெல் கொள்முதல் செய்வது போல சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி ஆகிய விளை பொருட்களை தமிழக அரசே கொள்முதல் நிலையங்களை அமைத்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும். உரிமம் இல்லாத போலி பூச்சிக் கொல்லி மருந்து, உரம், போலி விதைகளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தரமான விதைகளையும், கட்டுப்படியாகக்கூடிய விலையையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x