Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

நெல்லை அருகே இளைஞர் கொலை :

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே உள்ள வடக்கு தாழையூத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் கண்ணன் (35). கட்டிட ஒப் பந்ததாரராக தொழில் செய்து வந்தார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர், நேற்று பண்டாரகுளம் அருகே பொது குடிநீர் குழாயில் பணியாளர்களுக்காக குடிநீர் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி வடக்கு தாழையூத்து மக்கள் பண்டாரகுளம் அருகே திருநெல்வேலி- மதுரை நான்குவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x