Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM
திருநெல்வேலி: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் வரும் 15, 16-ம் தேதிகளில் திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் ஆணைய வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்துகிறார். வழக்கு விசாரணையில் கலந்து கொள்ள வரும் வழக்கறிஞர்கள் மற்றும் தரப்பினர்கள் கரோனா பெருந்தொற்றின் காரணமாக அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி முகக் கவசம் அணிந்து வர வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று, திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT