Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

ரயிலில் சிக்கி விவசாயி உயிரிழப்பு :

நாட்றாம்பள்ளி அருகே ரயிலில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

நாட்றாம்பள்ளி அடுத்த ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பெருமாள் (65). இவர், பச்சூர் - கேத்தாண்டப்பட்டி இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது, பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த விரைவு ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜோலார் பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x