Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM
வேட்பு மனுவில் தவறான தகவல் களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமமூர்த்தி என்ற வாக்காளர் தாக்கல் செய் திருந்த மனுவில், நடந்து முடிந்ததமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டி யிட்டார். அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரிடம் 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கே.சி.வீரமணி தனது வேட்பு மனுவிலும், பிரமாணப் பத்திரத்திலும் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். எனவே, வேட்பு மனுவில் தவறான தகவல்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, தனது வேட்புமனுவில் தவறான நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட்டுள்ளார். அவரது சொத்து விவரங்கள், வருமானவரி கணக்குடன் ஒத்துப்போகவில்லை. எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
அப்போது, தேர்தல் ஆணையத் தின் தரப்பில், இதுதொடர்பாக குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி, மனுதாரரின் புகார் மனுவை முடித்து வைத்து விட்டதாக தெரிவிக்கப் பட்டது. மேலும், கடந்த 1966-ம் ஆண்டுக்கு முன், வேட்புமனுவில் தவறான தகவல்கள் அளிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையமே புகார் அளித்து வந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக யார் வேண்டுமானாலும் குற்ற நடவடிக்கை எடுக்க வகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தேர்தல் ஆணையம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தர விட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT