Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM
தேனி
தேனி மின் பகிர்மான உதவி செயற்பொறியாளர் து.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பராமரிப்புப் பணிகள் காரணமாக வீரபாண்டி துணை மின் நிலையத்துக்குட்பட்ட வீரபாண்டி, உப்பார்பட்டி, டொம்புச்சேரி, உப்புக்கோட்டை, பத்ரகாளிபுரம், குடிதண்ணீர் மின் இணைப்பு, எல்எஸ் மில் ஆகிய பகுதிகளில் நாளை (ஜூலை 13) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கமுதி
கமுதி துணை மின் நிலை யத்தில் ஜூலை 14-ல் பராமரிப்பு பணி நடக்கிறது.
அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, கமுதி நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான அபிராமம், முதுகுளத்தூர், செங்கப்படை, பேரையூர், மண்டல மாணிக்கம், கீழராமநதி, பார்த்திபனூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக, கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் டி.சந்திரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT