Published : 12 Jul 2021 03:15 AM
Last Updated : 12 Jul 2021 03:15 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் ஜிகா வைர ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்துள்ள பாறசாலையில் ஜிகா வைரஸால் கர்ப்பிணி பாதிக்கப்பட்டதால், சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. களியக்காவிளை, காக்காவிளை, நெட்டா சோதனைச் சாவடிகள் மட்டுமின்றி பளுகல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வீடுதோறும் சுகாதாரத்துறையினர் நேற்று 2-வது நாளாக வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டனர். கொசுப்புழுக் கள் உற்பத்தியை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
பளுகலில் நடைபெற்ற சுகா தார பணிகளை ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டார்.
அவர் கூறும்போது, “கேரளா வில் ஜிகா வைரஸ் பரவி வருவதால், எல்லைப் பகுதி கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி எல்லையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, உடம்பில் கொப்பளம் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
சுகாதார பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணலீலா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதேபோல் களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்.பி. பத்ரிநாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.
கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கும், இங்கிருந்து கேரளாவுக்கும் தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இதனால் எல்லைப் பகுதிகள் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT