Published : 12 Jul 2021 03:15 AM
Last Updated : 12 Jul 2021 03:15 AM

கிணற்றுக்குள் விழுந்த கூலி தொழிலாளி உயிருடன் மீட்பு :

காட்பாடி

காட்பாடி அடுத்த திருமணி பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி அமர்நாத்(45). இவர், கடந்த 8-ம் தேதி இரவு வெளியே சென்றார். அப்போது, அதேபகுதியில் உள்ள 70 அடி ஆழ விவசாயக் கிணற்றில் அவர் தவறி விழுந்தார்.

கிணற்றில் தவறி விழுந்த அமர்நாத் காப்பாற்றக்கோரி கூச்சலிட்டார். இரவு நேரம் என்பதால் யாரும் வரவில்லை. இதனால் தான் அணிந்திருந்த லுங்கியை கிணற்றில் இருந்த குழாயில் கட்டி இரவு முழுவதும் கிணற்றுக்குள்ளேயே இருந்துள்ளார். மறுநாள், விடிந்த போது அமர்நாத் கிணற்றில் இருந்து காப்பாற்றக்கோரி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிணற்றுக்குள் பார்த்தனர்.

அப்போது அமர்நாத் கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனே காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் அமர்நாத்தை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தனர். இது குறித்து காட்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x