Published : 11 Jul 2021 03:13 AM
Last Updated : 11 Jul 2021 03:13 AM

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 19 வரை நீட்டிப்பு - புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்து அனுமதிடீக்கடைகள் இரவு 9 மணி வரை இயங்கலாம் : தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 19-வரை நீட்டித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்துக்கும், டீக்கடைகள் இரவு 9 மணி வரை இயங்கவும் அனுமதி அளித்துள்ளார். மேலும் மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்து தேர்வுகளை நடத்தவும் அனுமதிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை ஜூலை 12-ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மாநிலத்தின் தொற்று நிலையை தொடர்ந்து கண்காணித்து கட் டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத் தில் கொண்டு அனைத்து மாவட்டங்களி லும் வரும் ஜூலை 19-ம் தேதி வரை கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து தடை செய்யப்படுகிறது.

l புதுச்சேரி தவிர்த்து மாநிலங்களுக்கிடையில் தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்த வழித்தடங்கள் தவிர சர்வதேச விமான போக்குவரத்து ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

l திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் பங்கேற்கும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் செயல்பட தடை தொடர்கிறது.

l திருமண நிகழ்வுகளில் 50 பேர், இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும்.

l மேலும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதி கள் தவிர அனைத்து பகுதிகளி லும் ஏற்கெனவே உள்ள செயல்பாடு களுக்கான அனுமதிகள் தொடரும். இரவு 8 மணிவரை அனுமதிக்கப் பட்டுள்ள கடைகள், செயல்பாடுகள் நாளை முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும்.

மேலும், பின்வரும் கூடுதல் செயல் பாடுகள் அனுமதிக்கப்படும். அதன் விவரம் வருமாறு:

l புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.

l மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்து தேர்வுகளை நடத்தலாம். விவரங்களை முன்கூட்டியே மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.

l உணவகங்கள், தேநீர் கடைகள், அடு மனைகள், நடைபாதைக் கடைகள், இனிப்பு, கார விற்பனை கடைகள் ஆகியவை 50 சதவீத வாடிக்கை யாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்படலாம்.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

l கடைகளின் நுழைவு வாயில்களில் கை கழுவும் திரவம் கட்டாயமாக வைக் கப்பட வேண்டும். உடல்வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும்.

l கடை பணியாளர்கள், வாடிக்கையாளர் கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

l குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள், ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதுடன், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியானவர்களை அனுமதிக்கக் கூடாது.

l கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க போதிய இடைவெளியில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

தொற்று கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

l தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்து தல் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக் கைகளை பின்பற்றுதல் ஆகியவை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப் படும்.

l கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க்கட்டுப் பாட்டு மண்டல எல்லைகளை நுண் ணளவுவரை வரையறுத்து, தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

l நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதியுண்டு. இப்பகுதி களில் மருத்துவ அவசர சேவைகள், அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர இதர செயல்பாடுகளுக்கு அனுமதியில்லை.

l நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தொற்று பரவலை வீடுவீடாக கண் காணிக்க குழுக்கள் அமைக்கப்படும்.

இதுதவிர, அனுமதிக்கப்பட்ட பல் வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தொடர் புடைய துறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும் கூட்டம் கூடுவதையும் தடுக்க வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டதும் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச் சையை பெற வேண்டும்.

கரோனா தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு, மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடரும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு அளித்த ஒத்துழைப்பின் காரணமாகவே நோய்த்தொற்று குறைந்து வந்துள்ளதை மனதில் கொண்டு தொடர்ந்து அரசின் நட வடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து தொற்றை முற்றாக அகற்ற உதவ வேண்டும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x