Published : 11 Jul 2021 03:13 AM
Last Updated : 11 Jul 2021 03:13 AM

எம்பிபிஎஸ் மாணவருக்கு ஆயுஷ் பயிற்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு :

புதுடெல்லி: எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் ஆயுஷ் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும் எனறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவ முறைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஆயுஷ் என்ற துறையை அமைத்துள்ளது. ஆயுஷ் மருத்துவ முறைகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் பணியில் ஆயுஷ் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் அலோபதி மருத்துவம் பயிலும் மாணவர்கள் ஆயுஷ் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 7-ம் தேதி என்எம்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளில் ஏதெனும் ஒன்றில் பயிற்சி எடுக்கவேண்டும். இது ஒரு கட்டாய இன்டர்ன்ஷிப் பயிற்சியாகும். எம்பிபிஎஸ் மாணவர்கள் தங்கள் விருப்பப்படி ஏதாவது ஒரு ஆயுஷ் மருத்துவ முறையைத் தேர்வு செய்து அதில் ஒரு வாரம் தேர்ச்சி பெறவேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x