Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று புதுச்சேரி மகிளா காங்கிரஸ் சார்பில், புஸ்சி வீதியில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையம் முன்பு,கண்டன போராட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்பி வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாஜக அரசைக் கண் டித்துப் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT