Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM

புதுச்சேரி மக்கள் நீதிமன்றத்தில் - 1,102 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.4.20 கோடிக்கு தீர்வு :

புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1, 102 வழக்குகள் முடித்து வைக்கப் பட்டு, ரூ.4.20 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணையத்தில் ஒரு அமர்வும், காரைக்காலில் 3 அமர்வுகளும், மாஹே, ஏனாமில் தலா 1 அமர்வு என மொத்தம் 15 அமர்வுகள் செயல்பட்டன. இதில் சமாதானமாகக் கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், கணவன் - மனைவி சிக்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், உரிமையியல், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் என நிலுவை மற்றும் நேரடி வழக்குகள் 2,039 இந்த மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் 1,102 வழக்குகள் முடித்து வைக்கப் பட்டன. இதில் ரூ.4 கோடியே 20 லட்சத்து 43 ஆயிரத்து 932-க்கு தீர்வு காணப்பட்டது. இவற்றில் 2011-ல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மோட்டார் வாகன நஷ்ட ஈட்டு வழக்கில் ரூ. 20 லட்சம் நஷ்டஈடு வழங்க தீர்வு காணப்பட்டது. மேலும் 7 வருடத்துக்கு மேலாக நிலுவையில் உள்ள 3 மோட்டார் வாகன நஷ்டஈடு வழக் குகளுக்கும் தீர்வு காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x