Published : 10 Jul 2021 03:13 AM
Last Updated : 10 Jul 2021 03:13 AM

பி.எஸ்.என்.எல். சேவைகள் விற்பனை உரிமத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு :

ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பி.எஸ்.என்.எல். சேவைகள் விற்பனை செய்வதற்கான உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் (வர்த்தகம்) கே.எஸ்.வெங்கடசுப்ரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில், கோவை வர்த்தக பகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் சிம் கார்டு, ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் இதர பி.எஸ்.என்.எல். சேவைகளை விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து வரும் 23-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்கள், சந்தேகங்களுக்கு 0422-2457400 அல்லது 8903418128 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x