Published : 09 Jul 2021 03:13 AM
Last Updated : 09 Jul 2021 03:13 AM
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு விஷ்வேஸ்வரய்யா சிறந்த ஆசிரியர்விருது, டாக்டர் பிரிதம் சிங்அறக்கட்டளை விருது மற்றும்மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கான விஷ்வேஸ்வரய்யா விருது ஆகியவை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு தகுதியான ஆசிரியர்கள், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் இன்று (ஜூலை 9) நிறைவுபெறுவதாக இருந்தது. இந்நிலையில், விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வரும் 18-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT