Published : 09 Jul 2021 03:13 AM
Last Updated : 09 Jul 2021 03:13 AM
பொள்ளாச்சி அடுத்த நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னேரிப்பாளையம் மற்றும் தாராபுரம் சாலை பகுதியில் ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு, பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இரண்டு ரேஷன் கடை களின் கட்டுமானப் பணியும் 6 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில், இதுவரை பணிகள் நிறைவடையவில்லை.
உடனடியாக பணிகளை முடித்து, நெகமம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் திடம் ரேஷன் கடைகளை ஒப்படைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT