Published : 09 Jul 2021 03:14 AM
Last Updated : 09 Jul 2021 03:14 AM

அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 பரிசு : குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் அறிவிப்பு

குன்னூர்

அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை ஊக்கப்படும் வகையில், குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்படும் என குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் 1,200 மாணவர்களுக்கு மேல் பயின்று வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக, தனியார் பள்ளிகள் மீதான ஆர்வத்தில், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் பெற்றோர் சேர்த்ததால், குன்னூர் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்தது.

தமிழகத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு, கணினி வகுப்பு, ஆங்கில பிரிவு தொடங்கப்பட்டது. இலவசமாக நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், பைகள் வழங்கப்படுகின்றன. தற்போது குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில், அரசுப் பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,000 பரிசு வழங்குவதாக குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன் அறிவித்திருந்தார். அதன்படி அரசுப்பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கு தலா ரூ.1,000 பரிசு வழங்கினார். தொடர்ந்து அப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x