Published : 09 Jul 2021 03:16 AM
Last Updated : 09 Jul 2021 03:16 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் கிராமத்தில் வீரன் அழகுமுத்துகோன் 311-வது ஜெயந்தி விழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமக்கள் சார்பில் மரியாதை செலுத்துவது, ஊர்வலங்கள், இருசக்கர வாகனங்களில் பேரணியாக வருவதற்கு முற்றிலும் அனுமதியில்லை. அரசு சார்பில் மட்டுமே மரியாதை செலுத்தப்படும். பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பங்கேற்க அனுமதியில்லை.
இவ்விழாவை முன்னிட்டு கழுகுமலையில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியிலுள்ள மற்றும் கோவில்பட்டி, கயத்தாறு பகுதியிலுள்ள 37 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களை 11-ம் தேதி ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
அன்று, மதுபான விற்னை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT