Published : 09 Jul 2021 03:16 AM
Last Updated : 09 Jul 2021 03:16 AM

மா. கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

ஆம்பூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மா. கம்யூனிஸ்ட் கட்சியினர்.

திருவண்ணாமலை: பழங்குடியின மக்களின் உரிமை மீட்பு போராளியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஸ்டான் சுவாமியின் மறைவுக்கு மத்திய அரசே காரணம் எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமதாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஸ்டான் சுவாமி மறைவுக்கு மத்திய அரசுதான் காரணம் என கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்டச் செயலாளர் சிவகுமார், செயற்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், பிரகலாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன்,காங்கேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆம்பூர்

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆம்பூர் வட்ட செயலாளர் அருள் சீனிவாசன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கட்சி நிர்வாகிகள் இளங்கோ, சலாம், மணிமாறன், முனிலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x