Published : 08 Jul 2021 03:12 AM
Last Updated : 08 Jul 2021 03:12 AM

ரூ.7.36 கோடி ஹெராயின் கடத்த முயன்ற 2 பேர் கைது :

புதுடெல்லி

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலிருந்து கடந்த ஜூன் 27-ம் தேதி டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்தபயணிகளிடம் சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். இதில் சந்தேகப்படும் வகையில் இருந்த 2 பேரைதடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

இதுகுறித்து சுங்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த 2 பேர் விமானம் மூலம் டெல்லி வந்தனர். சந்தேகத்தின் பேரில், அவர்களை ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்-ரே சோதனை நடத்தினோம். அதில் அடிவயிற்று பகுதியில் மறைத்து வைத்திருந்த106 கேப்சூல்களை பறிமுதல் செய்தோம். பின்னர் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம். கேப்சூலில் இருந்தது ஹெராயின் போதைப் பொருளாக இருக்கலாம். 1.05 கிலோ எடை கொண்ட இதன் மதிப்பு ரூ.7.36 கோடி ஆகும்” எனகூறப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x